Tamil

திங்கள், 25 ஜூலை, 2016

தொளவை துணையுண்டு!


கட்டு மரம்மீது மீனவன் - அலை
கடலில் தனியொருவன் தானவன்.. 
வெட்டு கடல்வந்து விரட்டினும் - அதன்
விளிம்பை எதிர்கொள்ளுவான் அவன்!..


ஒத்தனா மரத்துக்காரனாம் - கையில்
ஒரு தொளவை மட்டும் தோழனாம்..
அத்தனைக் கடற்பரப்பிலும் - அதை
ஆயுதமாக்கிடும் வீரனாம்!..

கடலின்மீது அவன் செல்லுவான் - அங்குக்
கலங்கிடாது தொழில் செய்குவான்..
உடலில் வீசிடும் உப்பு நீர் - கண்டு
ஒருநிமிடமேனும் ஓய்ந்திடான்!..

உருண்டு திரள்கின்ற அலைகளே - இந்த
ஒத்தனா மரத்தை மூடுவீர்..
மருண்டு போகான் அம்மீனவன் - நீர்தான்
மறுபடியும் விலங்கே ஓடுவீர்!..

படுத்த மீனையும் வலையையும் - இன்று
பாய்ந்து பிடுங்கவா பார்க்கிறீர்?
தொடுத்து வெல்லுவான் மீனவன் - அந்தத்
தொளவை துணையுண்டு, காணுவீர்!..
×××

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக