விடுதலை நாளிதழில்(23-07-2016) வெளிவந்தது. பார்க்க :
http://viduthalai.in/page5/126485.html
(கட்டளைக் கலித்துறை)

காலம் கடந்த கவிப்புல மாகக் கனிந்தவனை..
ஞாலம் உணர்ந்து நயந்த நெறிகளின் ஞாயிறினை..
ஆலம் விழுதினும் ஆயிரம் மேலெனும் ஆளுமையை..
சாலப் பழித்த சதியைஎவ் வாறு சகிப்பதுவே!..
http://viduthalai.in/page5/126485.html
(கட்டளைக் கலித்துறை)

காலம் கடந்த கவிப்புல மாகக் கனிந்தவனை..
ஞாலம் உணர்ந்து நயந்த நெறிகளின் ஞாயிறினை..
ஆலம் விழுதினும் ஆயிரம் மேலெனும் ஆளுமையை..
சாலப் பழித்த சதியைஎவ் வாறு சகிப்பதுவே!..
நாடுகள் தாண்டிய நாயனார் வள்ளுவன், நாமறிவோம்..
ஏடுகள் போற்றும் எழுத்தர சன்புகழ் இன்றறிவோம்..
காடு களிலுள்ள கல்லின் மனத்தவர் காண்பதுண்டோ
பாடு புகழ்தமிழ்ப் பாவலன் வள்ளுவன் பற்றியதே?..
காவிப் பயல்களும் கண்ட நரிகளும் சாதிவெறிப்
பாவிக ளும்கூடிப் பாவலர் வேளைப் பரிகசித்துக்
கூவிப் புலம்பித் "தலித் இவன்!" என்று குரலெழுப்பித்
தாவிக் குதிக்கின்ற நாக ரிகமெங்குக் கற்றதுவே?..
எங்கள் தமிழன்னை ஈன்ற புதல்வனை இப்படியா
பங்கப் படுத்துவீர் உத்தர காண்டத்துப் பாவியர்காள்?
கங்கைக் கரையென்ன, காணும் கரையெங்கும் காட்சிதந்து
தங்கத் தகுந்தவன் தானெங்கள் ஐயன் தரணியிலே!..
இந்துக் கடற்கரை நின்றே இமயத்தை எட்டிநோக்கும்
செந்தமிழ்ச் செம்மலின் சிங்கம் நிகர்த்த சிலையிருக்க,
மந்த மதியினர்க் கும்பலின் கங்கை மருங்கினிலே
எந்த வகையினில் ஐயனின் தோற்றம் இலங்குவதே?..
தன்னை அளந்து தரணி அளந்து தடம்பதித்த
முன்னைச் சரித்திரம் முற்றும் அளந்த மொழிப்புதல்வன்
பொன்னை அளந்த புகழினன் என்னும் பொருளறியாச்
சின்னவர் முன்னர் திருவள்ளு வற்கேன் சிலையெடுப்பே?..
மதியாதார் வீடும் மடையர்கள் கோவிலும் மாளிகையும்
நதியோரத் தென்றலின் நச்சும் தமிழர் நமக்கெதற்கு?
குதியாட்டம் போடும் குரங்கிடம் நட்பினி கொள்வதுமேன்?
சதிகாரர் கங்கைத் தலம்விட்டு வா,எங்கள் சான்றவனே!..
அடக்க முடியலை: ஆத்திரம் தீரலை: அன்னியரின்
மடத்தனம் தன்னை மடக்க முடியலை: மாற்றலனின்
இடத்தில் உனக்கினி என்ன இருப்பு?சொல், எம்மவனே!
வடக்குக் கிறுக்கன் கிடக்கிறான்: வந்திடு, வள்ளுவனே!..
×××××
ஏடுகள் போற்றும் எழுத்தர சன்புகழ் இன்றறிவோம்..
காடு களிலுள்ள கல்லின் மனத்தவர் காண்பதுண்டோ
பாடு புகழ்தமிழ்ப் பாவலன் வள்ளுவன் பற்றியதே?..
காவிப் பயல்களும் கண்ட நரிகளும் சாதிவெறிப்
பாவிக ளும்கூடிப் பாவலர் வேளைப் பரிகசித்துக்
கூவிப் புலம்பித் "தலித் இவன்!" என்று குரலெழுப்பித்
தாவிக் குதிக்கின்ற நாக ரிகமெங்குக் கற்றதுவே?..
எங்கள் தமிழன்னை ஈன்ற புதல்வனை இப்படியா
பங்கப் படுத்துவீர் உத்தர காண்டத்துப் பாவியர்காள்?
கங்கைக் கரையென்ன, காணும் கரையெங்கும் காட்சிதந்து
தங்கத் தகுந்தவன் தானெங்கள் ஐயன் தரணியிலே!..
இந்துக் கடற்கரை நின்றே இமயத்தை எட்டிநோக்கும்
செந்தமிழ்ச் செம்மலின் சிங்கம் நிகர்த்த சிலையிருக்க,
மந்த மதியினர்க் கும்பலின் கங்கை மருங்கினிலே
எந்த வகையினில் ஐயனின் தோற்றம் இலங்குவதே?..
தன்னை அளந்து தரணி அளந்து தடம்பதித்த
முன்னைச் சரித்திரம் முற்றும் அளந்த மொழிப்புதல்வன்
பொன்னை அளந்த புகழினன் என்னும் பொருளறியாச்
சின்னவர் முன்னர் திருவள்ளு வற்கேன் சிலையெடுப்பே?..
மதியாதார் வீடும் மடையர்கள் கோவிலும் மாளிகையும்
நதியோரத் தென்றலின் நச்சும் தமிழர் நமக்கெதற்கு?
குதியாட்டம் போடும் குரங்கிடம் நட்பினி கொள்வதுமேன்?
சதிகாரர் கங்கைத் தலம்விட்டு வா,எங்கள் சான்றவனே!..
அடக்க முடியலை: ஆத்திரம் தீரலை: அன்னியரின்
மடத்தனம் தன்னை மடக்க முடியலை: மாற்றலனின்
இடத்தில் உனக்கினி என்ன இருப்பு?சொல், எம்மவனே!
வடக்குக் கிறுக்கன் கிடக்கிறான்: வந்திடு, வள்ளுவனே!..
×××××
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக