Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

நிமிர்ந்து நில்!!



இத்தாலி நாட்டினன்ஓர் கோபு ரத்தை
         எழுப்பிவைத்துப் புகழ்கண்டான் பலநூ றாண்டு..
முத்தமிழின் சோழனும்தன் மண்ணில் விண்ணை
        முட்டுகின்ற கோவில்ஒன்றை எழுப்பி வைத்தான்..
நற்றமிழன் எழுப்பியகல் பழசா னாலும்
          நகராமல் நிமிர்ந்துநிற்கும் பீடு காண்மின்..
பித்தலாட்டம் கொண்டதமிழ் நெஞ்சம் மட்டும்
         பீசாவின் கோபுரம்போல் சாய்ந்த தம்மா!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக