Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

ஆறாக் காயம்!..


இடக்கையில் மழலை யேந்தி, 
         இன்னொரு கையால் உச்சிக்
குடத்தினைப் பிடித்துத் தாங்கிக்
        குலமகள் செருப்பில் லாமல்
நடக்கையில்.. தனது காலில்
      நறுக்கெனத் தைத்த முள்ளை
எடுத்த தன் மகனின் கையில்
           இன்னமும் ஆறாக் காயம்!..


       ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக