சங்குத்துறை அழகுக் கடற்கரையில் - எங்கள்
சரித்திரம் உறங்கிக் கிடக்கிறது..
பொங்கும் நினைவலைகள் ஒவ்வொன்றும் - நெஞ்சில்
புதிய பூரிப்பு படைக்கிறது!..
ஐம்பதாண்டிற்கு முன்பிருந்தே - இதன்
அருமை பெருமைகளை நானறிவேன்..
பைம்புனல் அலைகள் தவழ்ந்துவரும் - இந்தப்
பள்ளம் கடற்கரையின் பாடறிவேன்!..
தாழையொடு கோட்டுப் புன்னைகளும் - நன்கு
தழைத்த பச்சோலைத் தென்னைகளும்..
வேலிக் கற்றாழையொடு பிரண்டை - சுற்றி
விரவிக் கிடந்த கடற் சோலையது!..
புத்தன்துறை சென்று படிப்பதற்கு - இந்தப்
பொழிலின் வழியாகச் சென்றுள்ளேன்..
சத்தம் போட்டு பல பாடல்களைச் - சொல்லிச்
சங்கீத பாடம் பயின்றுள்ளேன்!..
கொட்டுகுளம் வீழ்ந்து குளித்துள்ளேன் - அங்குக்
குட்டிச் சிப்பிநண்டு பிடித்துள்ளேன்..
செட்டு சேர்த்து அடி வைத்துள்ளேன் - சில
சீனடிகள் அங்குப் படித்துள்ளேன்!..
ஈர மணல் திடலின் உள்ளிருந்து - நான்
எடுத்த விளாங்கினை வகுப்பறையில்
ஊரவிட்டு இளம் டீச்சர்களைப் - பயந்(து)
ஓடவிட்டுக் குறும்(பு) இழைத்துள்ளேன்!..
முளளுருண்டைகளை உருட்டிவிட்டு - அவை
முந்திடாதபடி ஓடி வென்று..
எள்ளுருண்டைகளைப் பரிசு பெற்று - மூச்(சு)
இரைக்க இரைக்க நான் சிரித்துள்ளேன்!..
அள்ளும் எழில் சங்குத் துறையலையே - உன்மேல்
ஆசை எனக்கின்னும் குறையலையே..
உள்ளம் கவர் பள்ளம் வெள்ளலையே - உன்னை
ஒருவரும் இதுவரை வெல்லலையே!..
****
சரித்திரம் உறங்கிக் கிடக்கிறது..
பொங்கும் நினைவலைகள் ஒவ்வொன்றும் - நெஞ்சில்
புதிய பூரிப்பு படைக்கிறது!..
ஐம்பதாண்டிற்கு முன்பிருந்தே - இதன்
அருமை பெருமைகளை நானறிவேன்..
பைம்புனல் அலைகள் தவழ்ந்துவரும் - இந்தப்
பள்ளம் கடற்கரையின் பாடறிவேன்!..
தாழையொடு கோட்டுப் புன்னைகளும் - நன்கு
தழைத்த பச்சோலைத் தென்னைகளும்..
வேலிக் கற்றாழையொடு பிரண்டை - சுற்றி
விரவிக் கிடந்த கடற் சோலையது!..
புத்தன்துறை சென்று படிப்பதற்கு - இந்தப்
பொழிலின் வழியாகச் சென்றுள்ளேன்..
சத்தம் போட்டு பல பாடல்களைச் - சொல்லிச்
சங்கீத பாடம் பயின்றுள்ளேன்!..
கொட்டுகுளம் வீழ்ந்து குளித்துள்ளேன் - அங்குக்
குட்டிச் சிப்பிநண்டு பிடித்துள்ளேன்..
செட்டு சேர்த்து அடி வைத்துள்ளேன் - சில
சீனடிகள் அங்குப் படித்துள்ளேன்!..
ஈர மணல் திடலின் உள்ளிருந்து - நான்
எடுத்த விளாங்கினை வகுப்பறையில்
ஊரவிட்டு இளம் டீச்சர்களைப் - பயந்(து)
ஓடவிட்டுக் குறும்(பு) இழைத்துள்ளேன்!..
முளளுருண்டைகளை உருட்டிவிட்டு - அவை
முந்திடாதபடி ஓடி வென்று..
எள்ளுருண்டைகளைப் பரிசு பெற்று - மூச்(சு)
இரைக்க இரைக்க நான் சிரித்துள்ளேன்!..
அள்ளும் எழில் சங்குத் துறையலையே - உன்மேல்
ஆசை எனக்கின்னும் குறையலையே..
உள்ளம் கவர் பள்ளம் வெள்ளலையே - உன்னை
ஒருவரும் இதுவரை வெல்லலையே!..
****

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக