Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

கதிரவனே, கண்ணுறங்கு!


நீலவான் போர்வைக் குள்ளே
           நித்திரை கொள்ளச் செல்லும் 
கோலமஞ் சள்வட் டத்துச்
           சூரிய விளக்கே, நின்றன்
காலம்இன் றோடு மாலை
           கடந்ததை அறிந்து கொண்டேன்:
கீழைநீ நாளை தோன்றும்
           கெடுவரை கண்ணு றங்கு!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக