Tamil

வியாழன், 15 செப்டம்பர், 2016

ஆளுயர மீனே, மீனே..


தோளுயரம் தனையும் தாண்டித்
         தொங்கிநிற்கும் தலைகீழ் மீனே.. 
வாளுயர்த்தி உன்னை வீழ்த்தும் 
       வலுவிருந்தும், வலையில் மாட்டும்
கோளுடையார் எங்கள் நெய்தல்
        குலத்தவர்என்(று) அறிந்து கொள்வாய்:
ஆளுயர மீனே, நாஞ்சில்
          அரையர்கள்தாம் படுத்த மீனே!.. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக