
கரங்களில் ஏந்திய தீபம் - அது
காட்டுது தாய்மையின் வேதம்..
திறம்படும் ஆட்சியின் தொடக்கம் - அன்னை
தெரசாவிற்(கு) ஒரு வணக்கம்!..
அரசியல் பாதையின் பயணம் - இதில்
அன்னையின் ஆசியும் வரணும்..
தரமிகு பணிகளை ஆற்ற - அந்தத்
தலைவியின் துணைதனைப் பெறணும்!..
காண்பதற்(கு) அரியதோர் காட்சி - இது
காலம் தரும் சின்ன சாட்சி..
மாண்புடை முதல்வர் மம்தா - வங்க
மண்ணில் காண்க நல்லாட்சி!..
அஞ்சலி என்பது இதுதான் - இதற்(கு)
ஆயிரம் உள்ளது பொருள்தான்:
நெஞ்சினில் அன்னையின் தியாகம் - நின்று
நிலைத்திடில் மலைகளும் பனிதான்!!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக