Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

அஞ்சலி!!..

ஈரம் சொல்லும் அஞ்சலி!.. 
"""""""""""""""""""""""""""""""""""""""""


இணைஎவரு மற்ற எம்மவர் - இன்று 
     இறப்பெய்தி விட்ட நல்லவர்.. 
நினைவிருக்கும் வரையில் நிற்பவர் - எங்கள் 
     நெஞ்சத்தில் குடியி ருப்பவர்!..

கடலோர மக்கள் காவலர் - நெய்தல்
     காணிகளின் வள்ளல் நாயகர்..
மிடல்சான்ற ஜேப்பி யாரவர் - போன்ற
     மீனவர்தம் செம்மல் யாரவர்?..

தனியொருவ னாக நின்றவர் - வரும்
     தடைகள்தமை எளிதில் வென்றவர்..
துணிச்சல்மிகு கொள்கை பூண்டவர் - ஒரு
     துறைமுகத்தைத் தந்து ஆண்டவர்!..

ஏழைகளின் வீட்டில் தீபமாய் - கல்வி
     எ
ழுத்தறிவை யூட்டும் வேதமாய்.. 
தாழ்வதில்லை என்னும் பாடமாய் - நின்ற
     தந்தைசென்றார் இன்று தூரமாய்!..

நெடிதுயர்நம் தந்தை தோற்றமும் - இதழ் 

     நிறைந்தசிரிப் புடைய வண்ணமும்..
நொடிப்பொழுதில் ஓடிப் போனதேன்? - மனம்
     நொந்துவிட விதியும் விழைந்ததேன்?..

நன்றிசொல வார்த்தை ஒன்றிலை - எங்கள்
     நாயகர்க்கு மரணம் இன்றிலை..
என்றுமுள(து) எங்கள் அஞ்சலி - கண்ணின்
     ஈரமெலாம் சொல்லும் அஞ்சலி!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக