Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

விரைந்திடு, வெண்சங்கே!











அசையாமல் அமர்ந்திருக்கும் ஆழிவெண்சங்கே - உன்னை 
          ஆர் இங்கு அனுப்பி வைத்தார் ஆழிவெண்சங்கே?..
திசைமாறி வந்தனையோ ஆழிவெண்சங்கே? - உனக்குச்
      சேதியொன்று சொல்ல வேண்டும்  ஆழிவெண்சங்கே!..

கடலுக்குள் நடப்பதென்ன ஆழிவெண்சங்கே? - எங்கள்
     கணணீரை யாரறிவார் ஆழிவெண்சங்கே?..
திடல்விட்டுத் திரைக்குள்ளே  சென்றுவா சங்கே - எங்கள்
     செந்தமிழ் மீனவர் துயரம் கண்டுவா சங்கே!..

மீன்பிடிக்கச் செல்லுகின்றோம் ஆழிவெண்சங்கே - எம்மை
      மிருகங்கள் மேய்வது ஏன்,  ஆழிவெண்சங்கே?..
ஊன்பசிகொண்(டு) அலைகின்ற  ஓநாய்க் கூட்டம் - செய்யும் 

      உபத்திரவம் ஒழிவ(து) என்றோ ஆழிவெண்சங்கே?..

வலையறுத்து மீனெல்லாம் கடல்தனில் வீசிச் - சுற்றி
      வளைத்து சிறைப்படுத்துதல்தான்நடக்குது சங்கே!
அலைகடலின் அடல்மறவர்அடிமைகள் என்றே - எங்கள்
      அரசாங்கம் நினைக்கிறதா ஆழிவெண்சங்கே?..

கடிதத்தை எழுதுகின்ற  கடமையில் மட்டும் - இங்குக்
     கடுகளவும் குறைவில்லை  ஆழிவெண்சங்கே..
துடிதுடிக்கும் மீனவர்க்கோ  ஒவ்வொரு நாளும் - கடலில்
      தொடருவது சோகமன்றோ ஆழிவெண்சங்கே?.

படகுகளை இழந்து நிற்கும் பரதவனிங்கே - வெறும்
      பாய் கொண்டா மீன்பிடிப்பான்ஆழிவெண்சங்கே?..
அடம்பிடித்துத் தர மறுக்கும் சிங்களத்தானுக்(கு) - இந்த
      அரசாங்கம் அஞ்சுவதேன் ஆழிவெண்சங்கே?..

வெண்ணுரையைத் தழுவி உடன் விரைந்திடு சங்கே - நீந்தி
      வெட்டுக்கும் விலங்காலே சென்றிடு சங்கே..
கண்ணெதிரே சிங்களனைக் கணடிடு சங்கே - அந்தக்
      காடையன் மூஞ்சியில் காறி உமிழ்ந்திடு சங்கே!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக