கடல்வெளி நெடுகே..
கடல்வெளி நெடுகே..
"""""""""""""""""""""""""""""""""
ஆழிநீர்ப் பரப்பின் மீதில்
ஆயிரம் காத தூரம்
ஊழியின் காற்று போலே
ஒற்றுமைப் பயணம் மேற்கொண்(டு)
ஏழிசைப் பண்கேட் டற்கும்
இளைப்பாறிச் செல்வ தற்கும்
தோழிமா ருடன்வந் துள்ள
சுதந்திரப் புள்ளின் சுற்றம்!..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக