
கடல்மேலே செலுத்தவொரு கப்பல் செய்தான்..
கப்பலின்மேற் பரப்பினிலே செயற்கை யாய்ஓர்
திடலமைத்தான்: திடலெங்கும் பயிர்வ ளர்த்துச்
செவ்வியதோர் புல்வெளியைப் படைத்து விட்டான்..
இடம்கிடைக்க வில்லையெனும் கார ணத்தால்
இனயத்தில் துறைமுகத்தை நிறுவப் பார்க்கும்
மடக்குடிகாள், ஜப்பான்கா ரன்போல் உங்கள்
மண்டைவேலை செய்யாத மர்மம் என்னே!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக