Tamil

வியாழன், 15 செப்டம்பர், 2016

பொன்னார் புறப்பட்டுள்ளார்!..


ஒய்யார நன்னடையும், அடுக்க டுக்காய்
         உச்சியின்மேல் பன்னிரண்டு கலமும் தாங்கி.. 
மெய்யார வேர்த்தபடி நடந்து செல்லும்
         மெல்லிடையீர்! ஒருநிமிடம் நில்மின்! நீவிர்
கையாரப் பிடிக்காமல் கலங்கள் வீழாக்
         கலையறிந்த தாயெண்ணிக் கர்வம் கொள்ளேல்:
பொய்யாரப் பலகலன்கள் பூட்டிக் காட்டும்
'        பொன்னார்'என் றொருவர்இதோ புறப்பட் டுள்ளார்!.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக