
ஒற்றைமகன் தன்பின்னே நடந்து வந்தான்:
உழவுபற்றித் தந்தையிடம் பாடம் கேட்டான்:
"கற்றதொழில் நாட்டுக்கே அன்னம் வார்க்கும்
கலையப்பா! மறவாதே, மகனே!" என்றான்:
பெற்றெடுத்த பிள்ளையிடம் விவசா யத்தின்
பெருமைதனை விதைத்துவிடும் தகப்பன் மாருக்(கு)
உற்றநன்றி நாளையந்தப் புதல்வர் செய்வார்:
உழுதுண்டு வாழ்வாரே உலகை ஆள்வார்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக