'வண்ணாத்திப் பூச்சி'யா?
பெண்ணாட்டி பெயரிலே - உனக்கொரு
பிரியம் வந்துற்றதா?..
பெண்ணாட்டி பெயரிலே - உனக்கொரு
பிரியம் வந்துற்றதா?..
"பட்டர் ஃப்ளை" என்றுதான் - பெண் பெயர்
பாட்டிலும் எழுதினான்..
இட்டுக்கொள் பேருதான் - நீயும் ஓர்
இனிய 'வண்ணாத்தி'தான்!..
பாட்டிலும் எழுதினான்..
இட்டுக்கொள் பேருதான் - நீயும் ஓர்
இனிய 'வண்ணாத்தி'தான்!..
மலர்த் தோட்டம் எங்கணும் - நீ தரும்
மகரந்தப் பகிர்வினில்..
பலவண்ண மேனியில் - சிறகொடு
பறப்பதேன் தொலைவினில்?..
மகரந்தப் பகிர்வினில்..
பலவண்ண மேனியில் - சிறகொடு
பறப்பதேன் தொலைவினில்?..
தேனுண்ட காமமோ? - நான் உனைச்
சிறைப்பிடித்தல் சிரமமோ?
வான் உலவும் கர்வமோ? - உன்னையென்
வலைப்படுத்தல் கடினமோ?..
சிறைப்பிடித்தல் சிரமமோ?
வான் உலவும் கர்வமோ? - உன்னையென்
வலைப்படுத்தல் கடினமோ?..
உறைவிடம் சொல்லுவாய் - எனக்கொரு
உதவி நீ செய்குவாய்..
நறுந் தேனைக் கொண்டு போய்ச் - செலவிடும்
நாகரிகம் நவிலுவாய்!..
உதவி நீ செய்குவாய்..
நறுந் தேனைக் கொண்டு போய்ச் - செலவிடும்
நாகரிகம் நவிலுவாய்!..
தேன் தூங்கும் பூவுடன் - தினம்தொறும்
'தேன் நிலவு'க் கூடலா?..
காண்கின்ற மலரெலாம் - முயங்கிடல்
கற்பின்மை அல்லவா?..
'தேன் நிலவு'க் கூடலா?..
காண்கின்ற மலரெலாம் - முயங்கிடல்
கற்பின்மை அல்லவா?..
கற்பின்மை என்பினும் - உன்செயல்
கருணைக்(கு) உகந்ததே..
தப்பின்மை காண்கிறேன் - கொங்கினைத்
தருமம் நீ செய்வதால்!..
கருணைக்(கு) உகந்ததே..
தப்பின்மை காண்கிறேன் - கொங்கினைத்
தருமம் நீ செய்வதால்!..
எண்ணற்ற மலர்களை - நீதான்
இனப் பெருக்கம் செய்கிறாய்..
கண்ணுறு மலர்க்கெலாம் - நீதான்
கருவறைகள் தருகிறாய்!..
இனப் பெருக்கம் செய்கிறாய்..
கண்ணுறு மலர்க்கெலாம் - நீதான்
கருவறைகள் தருகிறாய்!..
சூற்பைகள் காய்களாய் - பொழில்தனில்
தொடர்ந்(து) அவை விதைகளாய்..
பார்ப்போர்க்கு மரங்களாய் - நிலமிசைப்
பசுமை உன் பணிகளாய்..
தொடர்ந்(து) அவை விதைகளாய்..
பார்ப்போர்க்கு மரங்களாய் - நிலமிசைப்
பசுமை உன் பணிகளாய்..
எந்நாளும் மலர்களைத் - தழுவியே
இயற்கையைக் கழுவிடும்
வண்ணத்துப் பூச்சியே! - நீயொரு
"வண்ணாத்திப் பூச்சி"யே!..
இயற்கையைக் கழுவிடும்
வண்ணத்துப் பூச்சியே! - நீயொரு
"வண்ணாத்திப் பூச்சி"யே!..
*******